குடும்பத்தகராறில் நாட்டு துப்பாக்கியால் தம்பியை சுட்ட வாலிபர்


குடும்பத்தகராறில் நாட்டு துப்பாக்கியால் தம்பியை சுட்ட வாலிபர்
x

பத்ராவதி அருகே குடும்பத்தகராறில் தம்பியை, வாலிபர் நாட்டுத்துப்பாக்கியால் சுட்ட சம்பவம் நடந்துள்ளது.

சிவமொக்கா;

அண்ணன்-தம்பி

சிவமொக்கா மாவட்டம் பத்ராவதி தாலுகா சித்திரமட்டி கிராமத்தை சேர்ந்தவர் முருகேஷ் (வயது 35). இவரது அண்ணன் முனிசாமி. இவர்களுக்கு அதேப்பகுதியில் சொந்தமாக விளைநிலங்கள் உள்ளது. இந்த நிலையில் முருகேஷ், வயலின் வரப்புகளில் பூச்செடிகளை நட்டுள்ளார்.

இதைபார்த்த அவரது அண்ணன் முனிசாமி, முருகேசின் வீட்டிற்கு சென்று அவரிடம் வயலின் வரப்புகளில் பூச்செடிகளை நட்டியதை கண்டித்துள்ளார். இதுதொடர்பாக 2 பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

போலீசார் விசாரணை

இதில் ஆத்திரமடைந்த முனிசாமி, வீட்டிற்கு சென்று தான் வைத்திருந்த நாட்டு துப்பாக்கியை எடுத்து வந்து தம்பி என்றும் பாராமல் முருகேசின் தொடையை நோக்கி சுட்டுள்ளார். இதில் குண்டு, முருகேசின் தொடையை துளைத்தது. இதனால் முருகேஷ், ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தார்.

இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர், முருகேசை உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக பத்ராவதி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக சிவமொக்காவில் உள்ள தனியாா் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த பத்ராவதி போலீசார் ஆஸ்பத்திரிக்கு சென்று பார்த்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story