சத்தீஸ்கரில் நக்சலைட்டு தாக்குதலில் ஒருவர் உயிரிழப்பு..!


சத்தீஸ்கரில் நக்சலைட்டு தாக்குதலில் ஒருவர் உயிரிழப்பு..!
x

சத்தீஸ்கரில் நக்சலைட்டு தாக்குதலில் ஒருவர் உயிரிழந்தார்.

சத்தீஸ்கர்,

சத்தீஸ்கர் மாநிலம் கோரார் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பைன்ஸ்கான் கிராமத்திற்கு அருகே நக்சலைட்டுகள் பொருத்தி வைத்திருந்த வெடிகுண்டு இடத்தில் சென்ற இருவர் வெடிகுண்டு வெடித்ததில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றொருவர் காயமடைந்தார். காயமடைந்த ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

உயிரிழந்தவர் அதே கிராமத்தில் வசிக்கும் பிரேஷ் மாண்டவி என்றும், மற்றொருவர் கிலேஷ் கோர்ரம் என்று காங்கர் காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார். மேலும் சம்பவ இடத்தில் நக்சலைட்டுகளை கண்டுபிடிக்கப் பாதுகாப்புப் படையினர் அப்பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.


Next Story