பஞ்சாப் பல்கலைக்கழகங்களில் முதல்-மந்திரிதான் வேந்தர் - சட்டசபையில் மசோதா நிறைவேறியது


பஞ்சாப் பல்கலைக்கழகங்களில் முதல்-மந்திரிதான் வேந்தர் - சட்டசபையில் மசோதா நிறைவேறியது
x

Image Courtacy: ANI

பஞ்சாப் அரசு நடத்தும் பல்கலைக்கழகங்களில் வேந்தர் பொறுப்பில் கவர்னருக்கு பதிலாக முதல்-மந்திரியை நியமிக்கும் மசோதா தாக்கல் செய்யப்பட்டது.

சண்டிகார்,

பஞ்சாப் மாநிலத்தில் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளில், ஆம் ஆத்மி அரசுக்கும், கவர்னர் பன்வாரிலால் புரோகித்துக்கும் இடையே மோதல் வலுத்து வருகிறது.

இந்நிலையில், பஞ்சாப் சட்டசபையின் 2 நாள் கூட்டத்தொடர் நேற்று முன்தினம் தொடங்கியது. அதில், பஞ்சாப் அரசு நடத்தும் பல்கலைக்கழகங்களில் வேந்தர் பொறுப்பில் கவர்னருக்கு பதிலாக முதல்-மந்திரியை நியமிக்கும் மசோதா தாக்கல் செய்யப்பட்டது.

நேற்று அந்த மசோதா மீது சிறிது நேரம் விவாதம் நடந்தது. பின்னர், ஓட்டெடுப்பில் அது நிறைவேற்றப்பட்டது. ஆளும் ஆம் ஆத்மி மட்டுமின்றி, அகாலிதளம், பகுஜன் சமாஜ் கட்சி ஆகிய கட்சிகளும் அதை ஆதரித்தன.


Next Story