கன்னியாகுமரி ரெயில் முன் பாய்ந்து மகனுடன் இளம்பெண் தற்கொலை


கன்னியாகுமரி ரெயில் முன் பாய்ந்து மகனுடன் இளம்பெண் தற்கொலை
x
தினத்தந்தி 1 March 2024 2:33 AM GMT (Updated: 1 March 2024 3:03 AM GMT)

கொல்லம்- கன்னியாகுமரி ரெயில் மோதி இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

திருவனந்தபுரம்,

கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் வர்க்கலா அருகே உள்ள மேல்வெட்டு பகுதியை சேர்ந்தவர் மகேஷ். இவருடைய மனைவி சரண்யா (வயது 25). இவா்களுக்கு 5 வயதில் மிதுன் என்ற ஒரு மகன் இருந்தான்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் மதியம் 12 மணியளவில் சரண்யா தனது மகன் மிதுனை தூக்கி கொண்டு வா்க்கலா அருகே அயந்தி பகுதியில் உள்ள ரெயில் தண்டவாளம் அருகே நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த கொல்லம்- கன்னியாகுமரி ரெயில் மோதி இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து வர்க்கலா போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் சரண்யா, மிதுன் ஆகிய 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக வர்க்கலா அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில், சரண்யாவின் கணவர் மகேஷ் மது போதைக்கு அடிமையானவர் என்பதும், இதனால் கணவன், மனைவிக்கு இடையே ஏற்பட்ட குடும்ப தகராறால் சரண்யா மகனுடன் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்ததும் தெரியவந்தது. மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story