கோவா: சாலையோர மரத்தில் கார் மோதி விபத்து - 3 பேர் பலி, ஒருவர் காயம்


கோவா: சாலையோர மரத்தில் கார் மோதி விபத்து - 3 பேர் பலி, ஒருவர் காயம்
x

கோப்புப்படம்

வடக்கு கோவாவில் சாலையோரம் இருந்த மரம் மீது கார் மோதியதில் 3 இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

பனாஜி,

இன்று அதிகாலை சுமார் 4 மணியளவில் வடக்கு கோவாவில் மபுசாவில் உள்ள குசேலி என்ற இடத்தில் சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென சாலையோரம் இருந்த மரம் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் காரில் பயணம் செய்த 3 இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் ஒருவர் படுகாயமடைந்தார்.

பெல்காமைச் சேர்ந்த நாயர் அங்கோல்கர் (28), ரோஹன் கடக் (26), சன்னி அன்வேகர் (31) ஆகிய 3 பேர் இந்த விபத்தில் உயிரிழந்ததாக மபுசா, வடக்கு கோவா காவல் ஆய்வாளர் பரேஷ் நாயக் கூறினார்.

மேலும், விஷால் கரேகர் (27) என்பவர் பலத்த காயம் அடைந்ததாகவும் அவர் கோவா மருத்துவக் கல்லூரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பபட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.


Next Story