உ.பி.: அதிகாலையில் பயங்கர விபத்து; 6 பேர் உயிரிழந்த சோகம்


உ.பி.:  அதிகாலையில் பயங்கர விபத்து; 6 பேர் உயிரிழந்த சோகம்
x

இவர்களுடைய கார், பைரியா காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் வந்தபோது, மற்றொரு காருடன் மோதி விபத்திற்குள்ளானது.

பல்லியா,

உத்தர பிரதேசத்தின் பல்லியா மாவட்டத்தில் விழா ஒன்றில் கலந்து கொண்டு விட்டு, கார் ஒன்றில் சிலர் வந்து கொண்டிருந்தனர். அதிகாலை 3 முதல் 3.30 மணியளவில் பல்லியாவின் பைரியா காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் வந்தபோது, இவர்களுடைய கார், மற்றொரு காருடன் மோதி விபத்திற்குள்ளானது.

இந்த சம்பவத்தில், லாரி ஒன்றின் மீதும் மோதி விபத்து ஏற்பட்டது. இதில், 2 குழந்தைகள் உள்பட 6 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர்.

அவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். விபத்திற்கான காரணம் பற்றிய தகவல் உடனடியாக தெரிய வரவில்லை என எஸ்.பி. ரஞ்சன் வர்மா கூறியுள்ளார். இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story