டெல்லியில் இரவில் பயங்கரம்: மர்ம கும்பல் துப்பாக்கி சூடு; வாலிபர் பலி


டெல்லியில் இரவில் பயங்கரம்:  மர்ம கும்பல் துப்பாக்கி சூடு; வாலிபர் பலி
x

அர்பாஸ் மீது கலகம், மிரட்டல், ஆயுதங்கள் சட்டம், கொலை முயற்சி மற்றும் கொலை உள்ளிட்ட 5 வழக்குகள் பதிவாகி உள்ளன.

புதுடெல்லி,

டெல்லியில் சீலாம்பூர் பகுதியில் பிரம்மபுரி புலியா என்ற இடத்தில் சென்று கொண்டிருந்த 2 வாலிபர்களை மர்ம நபர்கள் சிலர் நேற்றிரவு 8.30 மணியளவில் சூழ்ந்து கொண்டு தாக்க தொடங்கினர்.

இதனால் வாலிபர்கள் இருவரும் தப்பியோட முயன்றபோது, பொது கழிவறை அருகே திடீரென அவர்களை நோக்கி அந்த கும்பல் துப்பாக்கி சூடு நடத்தியது. இந்த தாக்குதலில் 2 பேரும் படுகாயமடைந்தனர். இரவு 8.45 மணியளவில் தாக்குதலை நடத்தி விட்டு மர்ம கும்பல் தப்பி விட்டது.

டெல்லியின் ஜப்ராபாத் பகுதியை சேர்ந்த வாலிபர்களான அவர்களில் ஒருவர் அர்பாஸ் (வயது 24) என அடையாளம் காணப்பட்டார். அவருக்கு தலை, நெஞ்சு மற்றும் வயிற்று பகுதியில் குண்டு பாய்ந்ததில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டார் என வடகிழக்கு டெல்லி காவல் ஆணையாளர் ஜாய் திர்க்கி கூறியுள்ளார்.

மற்றொர நபரான அபித் (வயது 22) என்பவருக்கு தலை, இடுப்பு பகுதியில் துப்பாக்கி குண்டுகளின் காயங்கள் ஏற்பட்டு உள்ளன. அவர் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

இதில், அர்பாசுக்கு எதிராக கலகம், மிரட்டல், ஆயுதங்கள் சட்டம், கொலை முயற்சி மற்றும் கொலை உள்ளிட்ட 5 வழக்குகள் பதிவாகி உள்ளன. அபித்தும் கொலை முயற்சி வழக்கில் சிக்கியுள்ளார்.


Next Story