விமான நிலையத்தில் நூதன முறையில் கைக்கெடிகாரம் திருடிய பயணி


விமான நிலையத்தில் நூதன முறையில் கைக்கெடிகாரம் திருடிய பயணி
x

விமான நிலையத்தில் நூதன முறையில் கைக்கெடிகாரம் திருடிய பயணி சிக்கினார்.

பெங்களூரு:

பெங்களூரு கெம்பேகவுடா விமான நிலையத்தில் இருந்து மும்பைக்கு ஒரு விமானம் செல்ல இருந்தது. அந்த விமானத்தில் தொழில்அதிபர் ஒருவர் பயணம் செய்ய இருந்தார். அவர் கையில் அணிந்திருந்த விலை உயர்ந்த கைக்கெடிகாரத்தை கழற்றி சோதனைக்காக கொடுத்து இருந்தார். சோதனை முடிந்ததும் கைக்கெடிகாரம் காணாமல் போனது தெரியவந்தது. அவர் இதுகுறித்து விமான நிலைய அதிகாரிகளிடம் புகார் அளித்தார்.

பின்னர் சோதனை செய்யும் இடத்தில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராக்களை அதிகாரிகள் ஆய்வு செய்த போது கைக்கெடிகாரத்தை ஒரு பயணி திருடியதும், அவர் மும்பை விமானத்தில் ஏறி சென்றதும் தெரியவந்தது. இதுகுறித்து மும்பை விமான நிலைய அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அந்த விமானம் மும்பையில் தரையிறங்கியதும் கைக்கெடிகாரத்தை திருடி சென்ற பயணியை விமான நிலைய போலீசார் கைது செய்தனர்.


Next Story