கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்தது சரியல்ல; டி.கே.சிவக்குமார் கண்டனம்


கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்தது சரியல்ல; டி.கே.சிவக்குமார் கண்டனம்
x

பெங்களூருவில் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்தது சரியல்ல என டி.கே.சிவக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.

பெங்களூரு:

கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

கர்நாடகம் அமைதியை விரும்பும் மாநிலம். கன்னடர்கள் கல்வியாளர்கள். அவர்கள் எப்போதும் சட்டத்தை கையில் எடுக்க மாட்டார்கள். போராட்டம் நடத்துவதாக இருந்தால் சட்டத்திற்கு உட்பட்டு நடத்துவார்கள். ஆனால் கர்நாடக அரசு, போராட்டம் நடத்துவார்கள் என்று பயந்து கல்லூரிகளுக்கு விடுமுறையை அறிவித்துள்ளது. நமது மாணவர்கள் பயங்கரவாதிகள் அல்ல. அவர்கள் சட்டத்தை மதித்து நடப்பவர்கள்.

பெங்களூரு மாணவர்கள் திறமையை வெளிப்படுத்தி கர்நாடகத்திற்கு பெருமை சேர்ப்பவர்கள். விடுமுறை அறிவித்தது சரியல்ல. அவர்களின் படிப்புக்கு குறுக்கீடு ஏற்படுத்தியுள்ள கர்நாடக அரசை கண்டிக்கிறேன். போராட்டம் நடத்த உரிமை உள்ளது. மத்திய அரசு, சட்டங்களை தங்களின் அரசியல் ஆதாயத்திற்கு பயன்படுத்துகிறது. எங்கள் கட்சி தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி எந்த தவறும் செய்யவில்லை.

இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.


Next Story