கார் மோதி டிராக்டர் டிரைவர் பலி; ஆந்திரா எம்.எல்.ஏ. உயிர் தப்பினார்


கார் மோதி டிராக்டர் டிரைவர் பலி; ஆந்திரா எம்.எல்.ஏ. உயிர் தப்பினார்
x

கோலார் அருகே கார் மோதி டிராக்டர் டிரைவர் பலியானார். விபத்தில் ஆந்திரா எம்.எல்.ஏ. உயிர் தப்பினார்.

கோலார்:

ஆந்திர மாநிலம் அனந்தப்பூர் மாவட்டம் மடகசிரா தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்து வருபவர் திப்பேசுவாமி. இவர் நேற்று முன்தினம் காரில் கர்நாடகம் வந்தார். பின்னர் அவர் கோலார் மாவட்டம் வழியாக ஆந்திராவுக்கு காரில் சென்று கொண்டிருந்தார். அவரது கார் கோலார் மாவட்டம் முல்பாகல் தாலுகா காந்தராஜா கிராமம் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக எதிரே வந்த டிராக்டரும், இவரது காரும் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் டிராக்டரும், காரும் கவிழ்ந்தன.

இதில் டிராக்டர் டிரைவர் முல்பாகல் பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணி(வயது 35) படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார். திப்பேசாமி எம்.எல்.ஏ.வும், அவரது கார் டிரைவரும் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். இச்சம்பவம் குறித்து முல்பாகல் புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து எம்.எல்.ஏ.வின் காரை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து இதுபற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story