தசரா விழாவை, முன்னாள் பிரதமர் தேவேகவுடாவால் தொடங்கி வைக்க வேண்டும்-கன்னட அமைப்பினர் வலியுறுத்தல்


தசரா விழாவை, முன்னாள் பிரதமர் தேவேகவுடாவால் தொடங்கி வைக்க வேண்டும்-கன்னட அமைப்பினர் வலியுறுத்தல்
x

தசரா விழாவை முன்னாள் பிரதமர் தேவேகவுடா தொடங்கி வைக்கவேண்டும் என்று கன்னட அமைப்பினர் வலியுறுத்தியுள்ளனர்.

மைசூரு:

உலக புகழ்பெற்ற மைசூரு தசரா விழா அடுத்த மாதம்(செப்டம்பர்) 26-ந்தேதி தொடங்கி அக்டோபர் 5-ந்தேதி வரை நடக்கிறது. ஆண்டுதோறும் தசரா விழா, சமூகத்தில் முக்கிய வாய்ந்த நபரால் தொடங்கி வைக்கப்படும். இந்தாண்டு தசரா விழாவை தொடங்கி வைக்கும் நபரை தேர்வு செய்யும் பணி நடந்து வருகிறது.

இந்த நிலையில் மைசூருவை சேர்ந்த கன்னட ரக்‌ஷன வேதிகே அமைப்பினர், மைசூரு தசரா விழாவை முன்னாள் பிரதமர் தேவேகவுடாவால் தொடங்கி வைக்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் அதனை வலியுறுத்தி மைசூரு மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். மேலும் இதுதொடர்பாக அவர்கள், கலெக்டர் பகாதி கவுதமை சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை கொடுத்துவிட்டு கலைந்து சென்றனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.


Next Story