காதலை ஏற்க மறுத்ததால்: காரை ஏற்றி இளம்பெண்ணை கொன்ற வாலிபர் கைது


காதலை ஏற்க மறுத்ததால்:  காரை ஏற்றி இளம்பெண்ணை கொன்ற வாலிபர் கைது
x

காதலை ஏற்க மறுத்ததால் காரை ஏற்றி இளம் பெண்ணை கொலை செய்ய முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

ஹாசன்:

ஹாசன் டவுன் பொம்மநாயக்கனஹள்ளியை சேர்ந்தவர் பரத். இதேபோல் அரிசிகெரேவை சேர்ந்தவர் சரண்யா. பரத், சரண்யாவை ஒரு தலையாக காதலித்து வந்தார். சரண்யா, பரத்தின் காதலை ஏற்று கொள்ள மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் பரத், சரண்யாவை கொலை செய்ய திட்டமிட்டததாக கூறப்படுகிறது. அதன்படி கடந்த 3-ந் தேதி ஹாசன் படாவனே பகுதியில் சரண்யா நடந்து ெசன்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த கார் ஒன்று சரண்யா மீது மோதியது.

இதில் பலத்த காயமடைந்த சரண்யாவை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கபட்டு வந்த நிலையில் கடந்த 4-ந் தேதி சரண்யா பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து ஹாசன் படாவனே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அதில் காதலை ஏற்க மறுத்ததால் சரண்யாவை, பரத் கார் ஏற்றி கொன்றது தெரியவந்தது. இந்த நிலையில் நேற்று பரத்தை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர் மீது கொைல வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story