சரக்கு வேன் - கார் மோதல்; 2 பேர் உடல் நசுங்கி பலி


சரக்கு வேன் - கார் மோதல்; 2 பேர் உடல் நசுங்கி பலி
x

கலபுரகியில், சரக்கு வேன் - கார் மோதியதில் 2 பேர் உடல் நசுங்கி பலியாகினர்.

கலபுரகி:

கலபுரகி மாவட்டம் ஆலந்தா தாலுகா சிடல் கிராமத்தில் நேற்று காலை ஒரு காரும், சரக்கு வேனும் நேருக்குநேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. அதில் பயணம் செய்த ஆலந்தா டவுன் பாலனஹள்ளியை சேர்ந்த ஜாபர்(வயது 27), குஜராத் மாநிலத்தை சேர்ந்த போதராம ஜஸ்வந்த்(40) ஆகியோர் உடல் நசுங்கி பலியானார்கள்.

மேலும் ஒருவர் படுகாயத்துடன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். ஆலந்தா டவுன் உமர்காவில் இருந்து சென்ற காரும், உமர்காவில் இருந்து ஆலந்தா நோக்கி சென்ற சரக்கு வேனும் மோதி விபத்துக்குள்ளாகின. விபத்து பற்றி ஆலந்தா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story