கொள்ளையடிக்க திட்டம்: ரவுடி கூட்டாளிகள் 4 பேர் கைது


கொள்ளையடிக்க திட்டம்: ரவுடி கூட்டாளிகள் 4 பேர் கைது
x

பெங்களூருவில் கொள்ளையடிக்க திட்டமிட்டிருந்த ரவுடி கூட்டாளிகள் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

பெங்களூரு:

பெங்களூரு தலகட்டபுரா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கொள்ளையடிக்க திட்டமிட்டு காத்து நின்ற 4 பேரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். அவர்கள் பெயர் நதீம், ரியாஜ், இம்ரான், அஷ்ரப் என்று தெரிந்தது. இவர்கள் 4 பேரும் பிரபல ரவுடி பாம்பே சலீமின் கூட்டாளிகள் ஆவாா்கள்.

தலகட்டபுராவில் தனியாக வரும் நபர்களிடம் ஆயுதங்களை மிரட்டியும், அவர்களை தாக்கியும் கொள்ளையடிக்க முயன்றது தெரியவந்தது. கைதானவர்களிடம் கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. 4 பேர் மீதும் தலகட்டபுரா போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


Next Story