ஸ்கூட்டர் விபத்தில் தனியார் நிறுவன மேலாளர் சாவு


ஸ்கூட்டர் விபத்தில் தனியார் நிறுவன மேலாளர் சாவு
x

பெங்களூருவில், ஸ்கூட்டர் விபத்தில் தனியார் நிறுவன மேலாளர் உயிரிழந்தார்.

பெங்களூரு:

பெங்களூரு சிக்கஜாலா பகுதியில் வசித்து வந்தவர் சன்மித் (வயது 34). இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் மேலாளராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் நேற்று இரவு வேலை முடிந்ததும் சன்மித் ஸ்கூட்டரில் வீட்டிற்கு சென்று கொண்டு இருந்தார். அப்போது சன்மித்தின் கட்டுப்பாட்டை இழந்த ஸ்கூட்டா் தறிகெட்டு ஓடி சாலையில் பல்டி அடித்து கவிழ்ந்தது.

இதில் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய சன்மித்தை அப்பகுதி மக்கள் மீட்டு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். ஆனாலும் சிகிச்சை பலன் அளிக்காமல் சன்மித் இறந்து விட்டார். இதுகுறித்து சிக்கஜாலா போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.


Next Story