சித்தராமையாவின் பேச்சை காங்கிரஸ் கட்சியினரே கேட்பது இல்லை-மந்திரி எஸ்.டி.சோமசேகர் பேச்சு


சித்தராமையாவின் பேச்சை காங்கிரஸ் கட்சியினரே கேட்பது இல்லை-மந்திரி எஸ்.டி.சோமசேகர் பேச்சு
x

சித்தராமையாவின் பேச்சை காங்கிரஸ் கட்சியினரே கேட்பது இல்லை என்று மந்திரி எஸ்.டி.சோமசேகர் தெரிவித்துள்ளார்.

மைசூரு:

மந்திரி எஸ்.டி.சோமசேகர் பேட்டி

மாநில கூட்டுறவுதுறை மந்திரி எஸ்.டி.சோமசேகர் மைசூருவில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-ஆர்.எஸ்.எஸ். குறித்து எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையாவுக்கு எதுவும் தெரியாது. மேலோட்டமாக தெரிந்து கொண்டு கருத்துகளை கூறி வருகிறார்.

ஆர்.எஸ்.எஸ்., அதன் செயல்பாடுகள் பற்றி முழுமையாக தெரிந்து கொண்டு பின்னர் பேசவேண்டும். தேவைப்பட்டால் ஆர்.எஸ்.எஸ். வரலாற்று புத்தகத்தை அனுப்பி வைக்கிறோம். அதை படித்து தெரிந்து கொள்ளட்டும். ஆர்.எஸ்.எஸ். எப்பொழுதும் தேசப்பற்றை முன் வைத்தே செயல்படுகிறது. எனவே, அதை குறித்து தவறான கருத்துகளை முன் வைக்கவேண்டாம்.

காங்கிரஸ் கட்சியினரே...

சித்தராமையா பேச்சை யாரும் கண்டு கொள்வது கிடையாது. குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் சொந்த கட்சியினரே அவரது பேச்சை கேட்பது இல்லை. மக்களின் கவனத்தை திசை திருப்ப சித்தராமையா, ஆர்.எஸ்.எஸ் பற்றி தவறான கருத்துகளை கூறி வருகிறார். பள்ளி பாடம் புத்தகம் குறித்து மந்திரி பி.சி.நாகேஸ் தெரிவித்துவிட்டார். இதனால் அதுபற்றி பேச வேண்டாம்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story