பெண்ணை கத்தியால் குத்தி படுகொலை செய்த மருமகன்


பெண்ணை கத்தியால் குத்தி  படுகொலை செய்த மருமகன்
x

பெண்ணை கத்தியால் குத்தி மருமகன் படுகொலை செய்த சம்பவம் யாதகிரியில் நடந்துள்ளது.

யாதகிரி:

யாதகிரி (மாவட்டம்) டவுன் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசித்து வந்தவர் ரசிதா(வயது 45). இவர் மராட்டிய மாநிலம் மும்பையைச் சேர்ந்தவர் ஆவார். இவரது மகளை மும்பையைச் சேர்ந்த ரபீக் என்பவர் திருமணம் செய்திருந்தார். திருமணத்திற்கு பிறகு ரசிதாவுக்கும், அவரது மருமகன் ரபீக்கிற்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் ரபீக் மும்பைக்கு சென்றுவிட்டார்.

காலையில் மும்பையில் இருந்து வந்த ரபீக் மீண்டும் தனது அத்தை ரசிதாவிடம் தகராறில் ஈடுபட்டார். அப்போது ஆத்திரம் அடைந்த ரபீக், தன்னிடம் இருந்த கத்தியால் ரசிதாவை சரமாரியாக குத்தி படுகொலை செய்தார். இச்சம்பவம் குறித்து யாதகிரி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரபீக்கை கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.


Next Story