அமராவதியில் மின்னல் தாக்கி 2 தொழிலாளிகள் பலி
அமராவதியில் மின்னல் தாக்கி 2 தொழிலாளிகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
அமராவதி,
அமராவதி மாவட்டம் காரஜ்காவ் கிராமத்தை சேர்ந்தவர் கிஷோர் பாட்டீல் (வயது42). அவினாஷ் நிம்போர்கர் (35). கூலி தொழிலாளிகளான இவர்கள் நேற்று மாலையில் விளைநிலத்தில் பயிர்களுக்கு மருந்து தெளிக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது திடீரென இடி, மின்னலுடன் லேசான மழை பெய்தது. அப்போது திடீரென மின்னல் 2 பேரையும் தாக்கியது. இதில் அவர்கள் 2 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர்.
இது பற்றி அறிந்த மாவுலி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று 2 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
Related Tags :
Next Story