போலீஸ் உளவாளியை துப்பாக்கியால் சுட்டு கொல்ல முயன்ற 6 பேர் கைது


போலீஸ் உளவாளியை துப்பாக்கியால் சுட்டு கொல்ல முயன்ற 6 பேர் கைது
x

போலீஸ் உளவாளியை துப்பாக்கியால் சுட்டு கொல்ல முயன்ற 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

மாவட்ட செய்திகள்

தானே,

தானே கோட்பந்தர் சாலை வெர்சோவா மேம்பாலம் அருகே கடந்த 2-ந்தேதி போலீஸ் உளவாளி வந்தார். அப்போது போதைப்பொருள் விற்று வந்த கும்பல் போலீஸ் உளவாளியை கண்டவுடன் அவரை துப்பாக்கியால் சுட்டு கொல்ல முயன்றனர். இதில் போலீஸ் உளவாளி லாவகமாக குனிந்து உயிர் தப்பினார். இது பற்றி அவர் போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின் படி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த விசாரணையில் 6 பேர் கொண்ட கும்பல் தான் போலீஸ் உளவாளியை துப்பாக்கியால் சுட்டு கொல்ல முயன்றது தெரியவந்தது. இதன் பேரில் விஷால் முத்துசாமி, ராகுல் விஸ்வகர்மா, கிஷோர் சிங், அனுராக் மாத்ரே, அபிஜித் பாஸ்தே, விகாஸ் ஆகிய 6 பேரை கைத செய்தனர்.

இவர்களிடம் இருந்து துப்பாக்கியை பறிமுதல் செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story