பெற்றோரை இழந்த சிறுமியை பலாத்காரம் செய்த 4 பேர் மீது வழக்கு


பெற்றோரை இழந்த சிறுமியை பலாத்காரம் செய்த 4 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 16 Aug 2023 7:15 PM GMT (Updated: 16 Aug 2023 7:16 PM GMT)

தானேயில் பெற்றோரை இழந்த சிறுமியை பலாத்காரம் செய்த 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்

தானே,

தானே மாவட்டத்தை சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர் கடந்த ஆண்டு பெற்றோரை இழந்தார். இதனால் அந்த சிறுமி தனது தாத்தா பாட்டியுடன் வசித்து வருகிறாள். அதே பகுதியை சேர்ந்த சாகின் கான், அபுகித் கான், நுக்சாத் கான், நிகாத் மெர்ச்சண்ட் ஆகிய 4 பேர் கடந்த 2 மாதமாக அந்த சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்தனர். பின்னர் தங்களுடைய மதத்திற்கு மாறும்படி உத்தன் பகுதியில் உள்ள தர்காவிற்கு சிறுமியை அழைத்து சென்றனர். அங்கு வைத்து சிறுமிக்கு கட்டாய மதமாற்றம் செய்தனர். அடிக்கடி துன்புறுத்தியதால் மனஉளைச்சல் அடைந்த சிறுமி சம்பவம் குறித்து மிராரோடு போலீசில் புகார் அளித்தாள். இந்த புகாரின் படி போலீசார் விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் உறுதியான நிலையில் போலீசார் கடந்த 10-ந் தேதி 4 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். அவர்களை பிடிக்க போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பாதிக்கப்பட்ட சிறுமியை மீட்டு காப்பத்தில் ஒப்படைத்தனர்.


Next Story