நிதி நிறுவனம் நடத்தி ரூ.30 லட்சம் மோசடி செய்த கணவன்-மனைவி மீது வழக்குப்பதிவு
மும்பை கல்யாண் பகுதியில் நிதி நிறுவனம் நடத்தி ரூ.30 லட்சம் மோசடி செய்த கணவன் மற்றும் மனைவி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தானே,
கல்யாணை சேர்ந்தவர் விஷாந்த் போயர். இவரது மனைவி பூஜா. இருவரும் சேர்ந்து அப்பகுதியில் நிதி நிறுவனத்தை நடத்தி வந்தனர். கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் நடப்பு ஆண்டு ஏப்ரல் மாதம் வரையில் தங்களிடம் முதலீடு செய்பவர்களிடம் இரட்டிப்பு வருமானம் தருவதாக கூறி உறுதி அளித்தனர். இதனை நம்பிய சிலர் தங்கள் பணத்தை முதலீடு செய்திருந்தனர். ஆனால் எந்தவிதமான இரட்டிப்பு வருமானமும் அவர்களுக்கு கிடைக்கவில்லை. மேலும் அவர்கள் செலுத்திய அசல் தொகையையும் திருப்பி கொடுக்காமல் இருந்தனர். இதனால் பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் போலீசில் புகார் அளித்தனர். இந்த புகாரின் படி போலீசார் நடத்திய விசாரணையில், இவர்கள் ரூ.30 லட்சம் வரையில் மோசடி நடத்தி இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் தம்பதி மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகி்ன்றனர்.
Related Tags :
Next Story