அடமானம் வைத்த வீட்டை விற்பதாக கூறி 5 பேரிடம் ரூ.1½ கோடி மோசடி


அடமானம் வைத்த வீட்டை விற்பதாக கூறி 5 பேரிடம் ரூ.1½ கோடி மோசடி
x
தினத்தந்தி 25 Jun 2023 7:00 PM GMT (Updated: 25 Jun 2023 7:00 PM GMT)

மும்பை கார்கர் பகுதியை சேர்ந்த சகோதரர்கள் இருவர் அடமானம் வைத்த வீட்டை விற்பதாக கூறி 5 பேரிடம் ரூ.1½ கோடி மோசடி செய்துள்ளனர்.

மும்பை,

மும்பை முல்லுண்டை சேர்ந்த வரி ஆலோசகர் ஒருவர் கார்கரை சேர்ந்த லஷ்மண் மற்றும் அவரது சகோதரர் ஹரேஷ் ஆகியோருக்கு சொந்தமான வீடு விற்பனைக்கு வருவதாக அறிந்தார். இதனை வாங்க கடந்த 2018-ம் ஆண்டு இருவரையும் அணுகினார். இவர்களிடம் பேரம் பேசி வெவ்வேறு கட்டத்தில் பணத்தை செலுத்தி உள்ளார். ஆனால் சகோதரர்கள் உறுதி அளித்தபடி வீட்டை அவருக்கு வழங்காமல் காலம் தாழ்த்தி வந்தனர். எனவே வரி ஆலோசகர் தான் கொடுத்த பணத்தை சகோதரர்களிடம் கேட்டு உள்ளார். ஆனால் அவர்கள் பணம் தர மறுத்துவிட்டதாக தெரிகிறது. இது குறித்து அவர் போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின் படி போலீசார் நடத்திய விசாரணையில் சகோதரர்கள் அடமானம் வைத்த வீட்டை விற்பதாக கூறி 5 பேரிடம் ரூ.1 கோடியே 50 லட்சம் மோசடி செய்தது தெரியவந்தது. இது குறித்து போலீசார் 2 சகோதரர்கள் மீதும் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.



Next Story