கொரோனா பாதிப்பு மீண்டும் 300-ஐ தாண்டியது


கொரோனா பாதிப்பு மீண்டும் 300-ஐ தாண்டியது
x

மராட்டியத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் 300-ஐ தாண்டி உள்ளது.

மாவட்ட செய்திகள்

மும்பை,

மராட்டியத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் 300-ஐ தாண்டி உள்ளது.

338 பேர் பாதிப்பு

மராட்டியத்தில் கொரோனா பாதிப்பு சமீபநாட்களாக மெல்ல மெல்ல அதிகரித்தது. இருப்பினும் அதிகளவில் உயராததால் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் இருந்தது. சில நாட்களுக்கு முன்பு 300-க்கு மேல் தாண்டிய தொற்று பாதிப்பு மீண்டும் குறைந்தது.

இந்தநிலையில் இன்று கொரோனா பாதிப்பு மீண்டும் 300-ஐ தாண்டி உள்ளது. அதன்படி 338 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டனர். கடந்த மார்ச் 9-ந் தேதி 359 பேர் பாதிப்புக்கு ஆளாகி இருந்தனர்.

அதன்பிறகு மீண்டும் தற்போது, அதிகளவில் பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. நேற்று முன்தினம் 208 பேர் மட்டும் தொற்றால் பாதிக்கப்பட்டு இருந்தனர்.

ஒருவர் பலி

புதிய பாதிப்பில் தலைநகர் மும்பையில் மட்டும் 218 பேர் ஆவர்.

கல்யாண் டோம்பிவிலி மாநகராட்சி பகுதியில் மட்டும் ஒருவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தற்போது மாநிலம் முழுவதும் 2 ஆயிரத்து 39 பேரும், மும்பையில் 1,430 பேரும் கொரோனாவுக்காக சிகிச்சை பெற்று வருகின்றனர்.



Next Story