போலீஸ் உளவாளி என கருதி கேங்மேனை தாக்கியவர் கைது- 3 பேர் மீது வழக்கு


போலீஸ் உளவாளி என கருதி கேங்மேனை தாக்கியவர் கைது- 3 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 28 Sep 2022 12:15 AM GMT (Updated: 28 Sep 2022 12:15 AM GMT)

பால்கர் மாவட்டம் விரார் அருகே போலீஸ் உளவாளி என கருதி கேங்மேனை தாக்கியவர் கைது மேலும் 3 பேர் மீது வழக்கு

வசாய்,

பால்கர் மாவட்டம் விரார் அருகே உள்ள வைத்தர்ணா ஆற்றில் இருந்து சட்டவிரோதமாக மணல்களை கடத்தி சென்றதாக போலீசாருக்கு புகார் வந்தது. இந்த புகாரின் படி போலீசார் விசாரணை நடத்தி மணல் கடத்தி சென்ற லாரிகளை பறிமுதல் செய்தனர். மணல் கடத்தல் தொடர்பாக வைத்தர்ணா ஆற்றுப்பாலத்தில் கேங்மேனாக பணிபுரிந்து வரும் முஸ்தபா ரப் பட்டேல் (வயது33) என்பவர் தான் போலீசாருக்கு உளவாளியாக செயல்பட்டு வருவதாக அப்பகுதியை சேர்ந்தவர்கள் கருதினர். கடந்த 23-ந்தேதி சாகர் பாட்டில் உள்பட கூட்டாளிகள் 4 பேர் சேர்ந்து கேங்மேனை பிடித்து சரமாரியாக தாக்கினர். இதனால் பாதிக்கப்பட்ட அவர் போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின் படி போலீசார் விசாரணை நடத்தி அவரை தாக்கிய முக்கிய குற்றவாளியான சாகர் பாட்டீலை நேற்று முன்தினம் கைது செய்தனர்.

இந்த சம்பவத்தில் தொடர்புடைய மேலும் 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story