சர்ச்கேட் அருகே 8 பேரை கத்தியால் தாக்கிய நைஜீரியர்- போலீசார் மடக்கி பிடித்தனர்
சர்ச்கேட் அருகே 8 பேரை கத்தியால் தாக்கிய நைஜீரியரை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.
மாவட்ட செய்திகள்
மும்பை,
மும்பை சர்ச்கேட் டாடா பூங்கா அருகே பார்சி கிணறு அருகே நைஜீரிய நாட்டை சேர்ந்த 50 வயது பிரஜை ஒருவர் திடீரென தான் வைத்திருந்த கத்தியால் அந்த வழியாக நடந்து சென்றவர்கள் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தினர். இதனை கண்டு பலர் தலைதெறிக்க ஓட்டம் பிடித்தனர். மேலும் சிலர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு போலீசார் வரும் முன்பு நைஜீரியர் தாக்குதலில் 8 பேர் காயமடைந்தனர்.
வெறியாட்டம் ஆடிய நைஜீரியரை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். காயமடைந்த 8 பேரை சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பிடிபட்ட ஆசாமியின் பெயர் ஜான் என்பது தெரியவந்தது. இவரை ஆசாத் மைதான் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று இதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story