முகமது நபி குறித்து சர்ச்சை கருத்து:- நுபுர் சர்மாவை விசாரணைக்கு அழைப்போம் போலீஸ் கமிஷனர் தகவல்
முகமது நபி குறித்து சர்ச்சைக்குரிய கருத்து கூறிய நுபுர் சர்மாவை விசாரணைக்கு அழைப்பபோம் என போலீஸ் கமிஷனர் கூறினார்.
மாவட்ட செய்திகள்
மும்பை,
பா.ஜனதா முன்னாள் தேசிய செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மா கடந்த 28-ந் தேதி டி.வி. விவாத நிகழ்ச்சியில் முகமது நபி குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை பேசினார். இதற்கு இஸ்லாமிய நாடுகளில் கடும் கண்டனங்கள் எழுந்தன. இதையடுத்து அவரை பா.ஜனதா இடைநீக்கம் செய்தது. இதற்கிடையே அவர் மீது மும்பை உள்பட பல இடங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்தநிலையில் இதுதொடர்பாக மும்பை போலீஸ் கமிஷனர் சஞ்சய் பாண்டே கூறியதாவது:-
பைதோனி போலீஸ் நிலையத்தில் நுபுர் சர்மாவுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே சட்டத்தின்படி வாக்குமூலத்தை பதிவு செய்ய விசாரணைக்காக அவரை அழைப்போம். சட்ட நடைமுறைகள் பின்பற்றப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story