ஹவாலா மூலம் கடத்த முயன்ற வெளிநாட்டு பணம் ரூ.15 கோடி பறிமுதல்- பெண் உள்பட 4 பேர் கைது


ஹவாலா மூலம் கடத்த முயன்ற வெளிநாட்டு பணம் ரூ.15 கோடி பறிமுதல்- பெண் உள்பட 4 பேர் கைது
x

மும்பை விமான நிலையத்தில் ஹவாலா மூலம் கடத்த முயன்ற வெளிநாட்டு கரன்சி ரூ.15 கோடியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதில் சூடான் நாட்டை சேர்ந்த பெண் உள்பட 4 பேரை கைது செய்தனர்.

மாவட்ட செய்திகள்

மும்பை,

மும்பை விமான நிலையத்தில் ஹவாலா மூலம் கடத்த முயன்ற வெளிநாட்டு கரன்சி ரூ.15 கோடியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதில் சூடான் நாட்டை சேர்ந்த பெண் உள்பட 4 பேரை கைது செய்தனர்.

வெளிநாட்டு பணம்

மும்பையில் இருந்து வெளிநாட்டிற்கு ஹவாலா மூலம் பணம் கடத்தப்படுவதாக விமான புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் நேற்று முன்தினம் சுங்கவரித்துறை அதிகாரிகளுடன் இணைந்து வெளிநாட்டிற்கு செல்ல இருந்த பயணிகளிடம் தீவிர சோதனை நடத்தினர். இச்சோதனையில் அங்கு வந்த சூடான் நாட்டை சேர்ந்த பெண் பயணியிடம் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

அவர் உடைமையில் கத்தை கத்தையாக மறைத்து வைக்கப்பட்டு இருந்த அமெரிக்கா டாலர் நோட்டுகளை கண்டு பிடித்தனர். இவற்றின் மதிப்பு ரூ.9 கோடி ஆகும்.

மேலும் 3 பேர் சிக்கினர்

முறையான ஆவணங்கள் இல்லாததால் பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக நடத்திய விசாரணையில் ஹவாலா மூலம் வெளிநாட்டிற்கு கடத்தி செல்வதாக தெரியவந்தது. அப்பெண் கொடுத்த தகவலின் படி கடத்தலில் தொடர்புடைய மேலும் 3 பேர் தென்மும்பை முகமது அலி ரோட்டில் உள்ள ஓட்டல் ஒன்றில் பதுங்கி இருப்பதாக தெரிவித்தார்.

இதன்படி அதிகாரிகள் அந்த ஓட்டலுக்கு சென்று அதிரடி சோதனை நடத்தினர். அங்கிருந்த மேலும் 3 பேர் பிடிபட்டனர்.

மேலும் உடைமைகளில் மறைத்து வைக்கப்பட்டு இருந்த ரூ.6 கோடி வெளிநாட்டு பணத்தை பறிமுதல் செய்தனர். இது குறித்து விமான நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து 4 பேரையும் கைது செய்தனர்.

பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

..................


Next Story