பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை- ஆசிரியர் கைது


பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை- ஆசிரியர் கைது
x

புனே மாவட்டத்தை சேர்ந்த பள்ளி ஒன்றில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் கைது

புனே,

புனே மாவட்டத்தை சேர்ந்த பள்ளி ஒன்றில் ஆயுஷ் பிரசாத் என்பவர் ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். இவர் 7-ம் வகுப்பு பயிலும் மாணவிகளை தகாத முறையில் உடலில் தொட்டு பாலியல் துன்புறுத்தல் செய்து உள்ளார். பாதிக்கப்பட்ட மாணவிகள் இது குறித்து பெற்றோரிடம் தெரிவித்தனர். இதனால் பெற்றோர் பள்ளி தலைமை ஆசிரியரிடம் புகார் அளித்து ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கும்படி தெரிவித்தனர். அதன்படி அவர் மீது பர்கான் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

போலீசார் ஆசிரியர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவரை பணி இடைநீக்கம் செய்து மாவட்ட கல்வித்துறை நடவடிக்கை எடுத்தது.


Next Story