தானேயில் கட்டிடம் இடிந்து மூதாட்டி பலி
தானே வாக்ளே எஸ்டேட்டில் கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் மூதாட்டி பலியானார்.
தானே,
தானே வாக்ளே எஸ்டேட் பகுதியில் இ.எஸ்.ஐ.எஸ் ஆஸ்பத்திரி உள்ளது. மதியம் 1 மணி அளவில் இந்த ஆஸ்பத்திரியின் 3-வது மாடியின் சிலாப் திடீரென இடிந்து கீழே விழுந்தது. அப்போது கீழே நின்ற 73 வயது மூதாட்டி மீது விழுந்ததால் அவர் காயமடைந்தார். தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு சென்று மூதாட்டியை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சிலாப் இடிந்த கட்டிடத்தை மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
மும்ரா நெடுஞ்சாலையில் மதியம் 1 மணி அளவில் பாறாங்கற்கள் சரிந்து சாலையில் விழுந்து விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக வாகனங்கள் எதுவும் சிக்காததால் யாரும் காயமடையவில்லை.
Related Tags :
Next Story