சாந்தாகுருசில் மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி


சாந்தாகுருசில் மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி
x
தினத்தந்தி 23 July 2023 8:00 PM GMT (Updated: 23 July 2023 8:01 PM GMT)

மும்பை சாந்தாகுருஸ் பகுதியில் மின்சாரம் தாக்கியதில் தொழிலாளி ஒருவர் பலியானார்

மும்பை,

மும்பை சாந்தாகுருஸ் கிழக்கு பகுதியில் ரத்த பரிசோதனை முகாம் ஒன்றில் சாக்கடை தூர்வாரும் பணி நேற்று மாலை நடந்தது. இந்த பணியில் தொழிலாளி ஒருவர் ஈடுபட்டார். சாக்கடையில் இருந்த கழிவுநீரை வெளியே தள்ள மின்மோட்டாரை தொழிலாளி பயன்படுத்தினார். அப்போது மின்கசிவு காரணமாக தொழிலாளி உடலில் மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டார். பலத்த காயமடைந்த அவரை அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு டாக்டர் நடத்திய பரிசோதனையில் ஏற்கனவே தொழிலாளி உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து பலியான தொழிலாளி யார்? எந்த பகுதியை சேர்ந்தவர் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story