சுவிஸ் ஓபன் பேட்மிண்டன் போட்டி: பி.வி. சிந்து மற்றும் கிதம்பி ஸ்ரீகாந்த் அரையிறுதிக்கு முன்னேற்றம்
சுவிஸ் ஓபன் பேட்மிண்டன் போட்டியில் பி.வி. சிந்து மற்றும் கிதம்பி ஸ்ரீகாந்த் அரையிறுதிக்கு முன்னேறி உள்ளனர்.
பேசல்,
சுவிட்சர்லாந்து நாட்டில் சுவிஸ் ஓபன் பேட்மிண்டன் போட்டிகள் நடந்து வருகின்றன. இதில் இந்தியா சார்பில் மகளிர் பிரிவு ஒற்றையரில் பி.வி. சிந்து மற்றும் பூஷணன் ஓங்பாம்ரங்பான் விளையாடினர்.
இதில் சிந்து 21-16, 23-21 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். இதேபோன்று ஆடவர் பிரிவு ஒற்றையரில் ஸ்ரீகாந்த் மற்றும் கன்டபோன் வாங்சரோயென் விளையாடினர். இந்த போட்டியில், 21-19, 21-15 என்ற செட் கணக்கில் ஸ்ரீகாந்த் வெற்றி பெற்றார்.
சுவிஸ் ஓபனில் நடந்த கலப்பு இரட்டையர் காலிறுதி போட்டி ஒன்றில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ராங்கிரெட்டி மற்றும் அஸ்வினி பொன்னப்பா இணை 17-21, 21-16, 18-21 என்ற செட் கணக்கில் மலேசியாவின் டான் கியான் மெங் மற்றும் லாய் பெய் ஜிங் இணையிடம் வீழ்ந்தது.
Related Tags :
Next Story