மாவட்டத்தில் 12 பேருக்கு கொரோனா தொற்று


மாவட்டத்தில் 12 பேருக்கு கொரோனா தொற்று
x

மாவட்டத்தில் 12 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

திருச்சி

நாடு முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பு தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது. தமிழகத்திலும் பல்வேறு மாவட்டங்களில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து வருகிறது. இந்தநிலையில் திருச்சி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 7 ஆக இருந்தது. தற்போது நேற்று ஒரே நாளில் 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் அனைவருக்கும் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


Next Story