கஞ்சா விற்ற 2 பேர் கைது


கஞ்சா விற்ற 2 பேர் கைது
x

கஞ்சா விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

தேனி

மயிலாடும்பாறை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அருண்பாண்டியன் தலைமையிலான போலீசார் காமன்கல்லூர் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது பாறைக்குட்டம் என்ற பகுதியில் கஞ்சா விற்பனை செய்த காமன்கல்லூரை சேர்ந்த ஆண்டவர் (வயது 55), குமணன்தொழுவை சேர்ந்த நடராஜ் (65) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து 1½ கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் கஞ்சா விற்பனையில் தொடர்புடைய குமணன்தொழுவை சேர்ந்த அரவிந்த்குமார் (25) என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.


Next Story