கஞ்சா விற்ற 2 பேர் கைது


கஞ்சா விற்ற 2 பேர் கைது
x

தஞ்சையில் கஞ்சா விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்

தஞ்சாவூர்

தஞ்சை கரந்தை பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாக தஞ்சை கிழக்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் போலீசார் சருக்கை பகுதியில் தீவிர சோதனை நடத்தினர். அப்போது அந்த பகுதியில் சந்தேகப்படும் வகையில் நின்று கொண்டிருந்த பள்ளியக்கிரஹாரம் பகுதியை சேர்ந்த ஜார்ஜ் மகன் கிறிஸ்துராஜ் (வயது 21), கரந்தையை சோ்ந்த விஷ்ணு (21) ஆகிய 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் விற்பனைக்காக 750 கிராம் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. உடனே போலீசார் கிறிஸ்துராஜ், விஷ்ணு ஆகிய 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். மேலும் அவர்களிம் இருந்த 750 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.






Next Story