2 பெண்களிடம் நகை பறிப்பு


2 பெண்களிடம் நகை பறிப்பு
x

2 பெண்களிடம் நகை பறிக்கப்பட்டது.

மதுரை


மதுரை செல்லூர் பூந்தமல்லி நகரை சேர்ந்தவர் சங்கர். இவருடைய மனைவி சித்ரா (வயது 40). இவர் திண்டுக்கல் மெயின் ரோடு விளாங்குடி பகுதியில் மொபட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள், அவர் கழுத்தில் அணிந்திருந்த 1¾ பவுன் நகையை பறித்து விட்டு தப்பி சென்றனர். இதுகுறித்து சித்ரா அளித்த புகாரின் பேரில், கூடல்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இதுபோல், செல்லூர் முனியாண்டி கோவில் தெருவை சேர்ந்தவர் லோகநாதன். இவருடைய மனைவி வசந்தி (58). இவர் செல்லூர் 50 அடி சாலையில் நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர், வசந்தி அணிந்திருந்த 1½ பவுன் நகையை பறித்துக் கொண்டு தப்பினர். இதுகுறித்து செல்லூர் போலீசில் வசந்தி புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story