சென்னை பட்டினப்பாக்கத்தில் கார் மோதி விபத்து; 2 பேர் உயிரிழப்பு
சென்னை பட்டினப்பாக்கத்தில் வழக்கறிஞர் ஒருவர் குடிபோதையில் கார் ஓட்டி விபத்து ஏற்படுத்தியதில் 2 பேர் உயிரிழந்தனர்.
சென்னை,
சென்னை பட்டினப்பாக்கம் பகுதியில் எம்.ஆர்.சி. நகரில் வழக்கறிஞர் ரீகன் என்பவர் காரில் வந்துள்ளார். அவர் குடிபோதையில் காரை ஓட்டியுள்ளார் என கூறப்படுகிறது.
இந்த நிலையில் கார் மோதி விபத்து ஏற்படுத்தியதில் 2 பேர் காயம், அடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் சிகிச்சை பலனின்றி 2 பேரும் உயிரிழந்தனர். அவர்கள் அமீர் ஜகான், செய்யது அபுதாஹிர் என அடையாளம் காணப்பட்டு உள்ளனர். இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story