கேள்விகேட்க முயன்றபோது பாஜகவினர் தன்னை தாக்கியது உண்மைதான்-ஆட்டோ ஓட்டுநர்


கேள்விகேட்க முயன்றபோது பாஜகவினர் தன்னை தாக்கியது உண்மைதான்-ஆட்டோ ஓட்டுநர்
x
தினத்தந்தி 19 Sep 2018 5:39 AM GMT (Updated: 19 Sep 2018 5:39 AM GMT)

தமிழிசையிடம் கேள்விகேட்க முயன்றபோது பாஜகவினர் தன்னை தாக்கியது உண்மைதான் என ஆட்டோ ஓட்டுநர் கதிர் தெரிவித்துள்ளார்

சென்னை

கடந்த 16-ஆம் தேதி சைதாப்பேட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற தமிழிசையிடம், பெட்ரோல் டீசல் விலை உயர்வு குறித்து ஆட்டோ ஓட்டுநர் கதிர் என்பவர் கேள்வி எழுப்பியிருந்தார். அப்போது, பாஜகவினர் சிலர் அவரை தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

சமூக வலைத்தளங்களில் ஆட்டோ டிரைவருக்கு ஆதரவாக பலர் கருத்து தெரிவித்து வந்தனர். இதனிடையே ஆட்டோ ஓட்டுநர் கதிர் மற்றும் அவரது குடும்பத்தினரை தமிழிசை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். அப்போது அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் இனிப்பு வழங்கி ஆறுதல் கூறினார்.

இந்நிலையில் தமிழிசையிடம் கேள்விகேட்க முயன்றபோது பாஜகவினர் தன்னை தாக்கியது உண்மைதான் என ஆட்டோ ஓட்டுநர் கதிர் தெரிவித்துள்ளார். தான் மது அருந்திவிட்டு கேள்வி கேட்க சென்றதாக கூறுவது தவறு என தெரிவித்துள்ள கதிர், பாஜகவினர் தாக்கியது தமிழிசைக்கு தெரியாது என்றும் தெரிவித்தார். தமிழிசை தன்னை வந்து சந்தித்தபோது பாஜகவினர் தாக்கியிருந்தால் வருத்தம் தெரிவிப்பதாக கூறியதாகவும் ஆட்டோ ஓட்டுநர் கதிர் தெரிவித்துள்ளார்.

Next Story