இலங்கை விவகாரத்தில் ஜெயலலிதாவின் நிலைப்பாட்டை பின்பற்றுவோம்- அமைச்சர் ஜெயக்குமார்


இலங்கை விவகாரத்தில் ஜெயலலிதாவின் நிலைப்பாட்டை பின்பற்றுவோம்- அமைச்சர் ஜெயக்குமார்
x
தினத்தந்தி 29 Oct 2018 7:34 AM GMT (Updated: 29 Oct 2018 7:34 AM GMT)

இலங்கை விவகாரத்தில் ஜெயலலிதாவின் நிலைப்பாட்டை பின்பற்றுவோம் என அமைச்சர் ஜெயக்குமார் கூறி உள்ளார்.


சென்னை

மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போதுஅவர் கூறியதாவது:-

மீனவர்கள் நலன் காப்பதில் இந்தியாவிலேயே தமிழகம் முன்னோடியாக உள்ளது.

ரஜினி அரசியலுக்கு வருவதால் அதிமுகவுக்கு எந்த பாதிப்பும் இல்லை, அதிமுக வாக்குவங்கியை ரஜினியால் எதுவும் செய்ய முடியாது. ரஜினியால் மட்டுமல்ல, யாராலும் அதிமுகவின் வாக்குவங்கியை சிதைக்க முடியாது.

நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்தத்தில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை. தவறு நடக்காத சூழலில் யாரும் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை, வழக்கை சந்திக்க தயார் என ஏற்கனவே முதலமைச்சர் அறிவித்து இருந்தார்.

இலங்கை விவகாரத்தில் ஜெயலலிதாவின் நிலைப்பாட்டை பின்பற்றுவோம். என கூறினார்.

Next Story