மதிமுக சார்பில் டிச.3-ல் நடைபெறும் ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டத்திற்கு திமுக ஆதரவு -மு.க.ஸ்டாலின்


மதிமுக சார்பில் டிச.3-ல் நடைபெறும் ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டத்திற்கு திமுக ஆதரவு -மு.க.ஸ்டாலின்
x
தினத்தந்தி 26 Nov 2018 7:10 AM GMT (Updated: 26 Nov 2018 7:10 AM GMT)

7 பேர் விடுதலையை வலியுறுத்தி மதிமுக சார்பில் நடைபெறும் ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டத்திற்கு திமுக ஆதரவு அளிக்கும் என மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.

சென்னை

தி.மு.க பொருளாளர் துரைமுருகன் அளித்த ஒரு பேட்டியில் கொள்கை அளவில் ஒத்துப்போவது வேறு, தேர்தல் கூட்டணி என்பது வேறு எனவே இப்போதைக்கு திமுக கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, விசிக உள்பட எந்த கட்சியும் இல்லை என கூறினார்.  இதற்கு பதில் அளித்த வைகோ  இந்த பேட்டி மதிமுக நிர்வாகிகளையும் தொண்டர்களையும் காயமடைய செய்து உள்ளது.  தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தான் இதற்கு பதில் கூறவேண்டும்  என கூறினார். 

இந்த நிலையில் 7 பேர் விடுதலையை வலியுறுத்தி மதிமுக சார்பில் டிசம்பர் 3- ந்தேதி  நடைபெறும் ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டத்திற்கு  திமுக  ஆதரவு அளிக்கும் என  மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.

Next Story