திருச்சியில் கோவில் திருவிழாவில் கூட்ட நெரிசல்; 7 பேர் பலி
திருச்சியில் கோவில் திருவிழாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் பலியாகி உள்ளனர்.
திருச்சி,
திருச்சி துறையூர் அருகே முத்தையம்பாளையம் பகுதியில் கருப்பசாமி கோவில் அமைந்து உள்ளது. இங்கு சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு பிடிக்காசு வழங்கும் நிகழ்ச்சி சிறப்புடன் கொண்டாடப்படும். இதற்காக திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் இங்கு ஒன்று கூடுவர்.
கோவில் திருவிழாவில் கருப்பசாமிக்கு சிறப்பு அபிசேகம் மற்றும் பூஜைகள் நடந்தன. இதன்பின் பக்தர்களுக்கு பிடிக்காசு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் மக்கள் ஒருவரை ஒருவர் முந்தி கொண்டு செல்ல முற்பட்டனர். இதனால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் ஒருவர் மீது ஒருவர் விழுந்துள்ளனர்.
இந்த கூட்ட நெரிசலில் 4 பெண்கள், 3 ஆண்கள் உள்பட 7 பேர் சிக்கி உயிரிழந்துள்ளனர். 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்து உள்ளனர். அவர்கள் மீட்கப்பட்டு துறையூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளனர்.
Related Tags :
Next Story