நடத்தை விதிகள் முடிவுக்கு வந்தது எடப்பாடி பழனிசாமி பணிகளை தொடங்கினார் தலைமை செயலகத்தில் அமைச்சர்களுடன் ஆலோசனை


நடத்தை விதிகள் முடிவுக்கு வந்தது எடப்பாடி பழனிசாமி பணிகளை தொடங்கினார் தலைமை செயலகத்தில் அமைச்சர்களுடன் ஆலோசனை
x
தினத்தந்தி 27 May 2019 11:15 PM GMT (Updated: 27 May 2019 9:12 PM GMT)

நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் கடந்த மார்ச் 10-ந்தேதி அறிவிக்கப்பட்டது. எனவே அன்று முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன.

சென்னை,

முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர் மற்றும் அமைச்சர்கள் அரசு பணியில் முழு அளவில் ஈடுபடவில்லை. எனவே தலைமை செயலகத்துக்கு அவர்கள் வராமல் அரசியல் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இந்தநிலையில், 26-ந்தேதி (நேற்று முன்தினம்) மாலையில் இருந்து தேர்தல் நடத்தை விதிகள் தளர்த்தப்படுவதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதைத்தொடர்ந்து நேற்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் செங்கோட்டையன், ஜெயக்குமார், வேலுமணி, தங்கமணி, சி.வி.சண்முகம் மற்றும் பல அமைச்சர்கள் வந்து அரசு பணிகளைத் தொடங்கினர்.

எடப்பாடி பழனிசாமியை அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, செங்கோட்டையன் ஆகியோர் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

Next Story