தமிழ்நாட்டில் நாடாளுமன்ற, சட்டமன்ற இடைத்தேர்தல்களை பிரித்து பார்த்து ஓட்டு போட்ட வாக்காளர்கள் 20 தொகுதி புள்ளி விவரம் நிரூபணம்


தமிழ்நாட்டில் நாடாளுமன்ற, சட்டமன்ற இடைத்தேர்தல்களை பிரித்து பார்த்து ஓட்டு போட்ட வாக்காளர்கள் 20 தொகுதி புள்ளி விவரம் நிரூபணம்
x
தினத்தந்தி 29 May 2019 12:14 AM GMT (Updated: 29 May 2019 12:14 AM GMT)

நாடாளுமன்ற தேர்தல், சட்டமன்ற இடைத்தேர்தல் என்று பிரித்து பார்த்து இருவேறு மனநிலையில் தமிழக வாக்காளர்கள் ஓட்டு போட்டுள்ளனர். 20 தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் மூலம் அது நிரூபணமாகியுள்ளது.

சென்னை,

நாடாளுமன்ற தேர்தலுடன் தமிழகத்தில் 22 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் நடைபெற்றது.

தமிழகத்தை பொறுத்தவரை இந்தத் தேர்தல் முடிவுகள் வித்தியாசமாக அமைந்திருந்தது. மத்தியில் பா.ஜ.க. ஆட்சியை பிடித்தாலும் தமிழகத்தில் ஒரு இடத்தைகூட பிடிக்க முடியவில்லை.

அதே நேரத்தில், மத்தியில் காங்கிரஸ் கூட்டணி படுதோல்வி அடைந்தாலும், தமிழகத்தில் தி.மு.க. தலைமையில் காங்கிரஸ் இடம்பெற்ற கூட்டணி 37 இடங்களை கைப்பற்றியது. இது தி.மு.க., காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

தமிழகத்தில் ஆளுங்கட்சியான அ.தி.மு.க., நாடாளுமன்ற தேர்தலில் ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றாலும், சட்டமன்ற இடைத்தேர்தலில் 9 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துக்கொண்டது. அதாவது, தேர்தலில் தோல்வியே மிஞ்சினாலும் ஆட்சியை தக்கவைத்த மகிழ்ச்சியில் அ.தி.மு.க. நிம்மதி பெருமூச்சு விட்டது.

இப்படி தேர்தல் தமிழகத்தில் வித்தியாசமான முடிவுகளை தந்தாலும், இடைத்தேர்தல் நடந்த சட்டமன்ற தொகுதிகளின் வாக்குகளையும், அதே தொகுதிகள் உள்ளடங்கிய நாடாளுமன்ற தேர்தலில் சட்டமன்ற தொகுதிவாரி வாக்குகளையும் ஒப்பிடும்போது, 2 தேர்தல்களையும் மக்கள் பிரித்து பார்த்து தெளிவாக வாக்களித்திருப்பது தெரியவருகிறது.

தமிழகத்தில் வேலூர் தொகுதி நீங்கலாக மீதமுள்ள 38 தொகுதிகளுக்கும் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. அதேபோல், பெரியகுளம், ஆண்டிப்பட்டி, திருவாரூர், தஞ்சாவூர், ஓசூர், பெரம்பூர், ஓட்டப்பிடாரம், விளாத்திகுளம், மானாமதுரை, அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, சோளிங்கர், பூந்தமல்லி, திருப்போரூர், சூலூர், நிலக்கோட்டை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், சாத்தூர், பரமக்குடி, குடியாத்தம், ஆம்பூர் ஆகிய 22 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெற்றது.

அதாவது, இந்த 22 தொகுதிகளில் குடியாத்தம், ஆம்பூர் ஆகிய 2 தொகுதிகள் வேலூர் நாடாளுமன்ற தொகுதிக்குள் வருகிறது. எனவே, இந்த 2 தொகுதி வாக்காளர்கள் சட்டமன்ற இடைத்தேர்தல் வாக்குகளை மட்டுமே பதிவு செய்தனர்.

மீதமுள்ள 20 சட்டமன்ற தொகுதி வாக்காளர்கள், நாடாளுமன்ற தேர்தலுக்கும் சேர்த்து ஒரே நேரத்தில் 2 வாக்குகளை பதிவு செய்தனர்.

ஆனால், நாடாளுமன்ற தேர்தல், சட்டமன்ற தேர்தல் என்று பிரித்து பார்த்தே 20 தொகுதி வாக்காளர்களும் ஓட்டுபோட்டுள்ளனர். உதாரணமாக, காஞ்சீபுரம் நாடாளுமன்ற தொகுதியில் உள்ள திருப்போரூர் சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க.வுக்கு இடைத்தேர்தலில் 82,335 வாக்குகள் கிடைத்துள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் 76,540 வாக்குகளாக அது குறைந்துள்ளது. அதாவது, தமிழகம் என்று வரும்போது அ.தி.மு.க.வுக்கு ஆதரவு அளித்த மக்கள்கூட, நாடாளுமன்ற தேர்தல் என்று வரும்போது அ.தி.மு.க.வை பா.ஜ.க.வின் கூட்டணி கட்சியாகவே பார்க்கின்றனர். அதனால், ஓட்டையும் மாற்றி போட்டு உள்ளனர்.

அதேபோல், சிவகங்கை நாடாளுமன்ற தொகுதியில் உள்ள மானாமதுரை சட்டமன்ற தொகுதியில், அ.தி.மு.க.வுக்கு இடைத்தேர்தலில் 85,228 வாக்குகளும், நாடாளுமன்ற தேர்தலில் 60,059 வாக்குகளும் கிடைத்துள்ளது. இந்த நாடாளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணியில் உள்ள பா.ஜ.க. வேட்பாளர் போட்டியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி நாடாளுமன்ற தேர்தலையும், சட்டமன்ற இடைத்தேர்தலையும் மக்கள் பிரித்து பார்த்தே வாக்களித்துள்ளனர்.

20 சட்டமன்ற தொகுதிகளில் நாடாளுமன்ற தேர்தல், சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் விவரம் வருமாறு:-



Next Story