ஆணவ கொலைகள் விவகாரம்; தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு


ஆணவ கொலைகள் விவகாரம்; தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
x
தினத்தந்தி 9 July 2019 6:35 AM GMT (Updated: 9 July 2019 6:35 AM GMT)

ஆணவ கொலைகள் விவகாரத்தில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

சென்னை,

தமிழகத்தில் ஆணவ கொலைகள் அதிகரித்து வருவது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது.

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் அமர்வு, சுப்ரீம் கோர்ட்டு பல உத்தரவுகளை பிறப்பித்தும் ஆணவ கொலைகள் நடக்கின்றன.  இதுபற்றி தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் பிற்பகல் 2:15 மணிக்கு ஆஜராகி விளக்கமளிக்க வேண்டுமென்று உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

ஆணவ கொலைகள் தொடர்பாக மத்திய அரசு தயாரித்துள்ள வரைவு சட்டத்தின் நிலை என்ன என்பதை விளக்க மத்திய அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஆஜராகவும் நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

Next Story