சென்னை வடபழனி பணிமனையில் விபத்து: 2 பேர் பலி; ஊழியர்கள் வேலைநிறுத்தம்
சென்னை வடபழனி பணிமனையில் ஏற்பட்ட விபத்தில் 2 பேர் பலியான நிலையில் ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ளனர்.
சென்னை,
சென்னை வடபழனி மாநகர அரசு போக்குவரத்து கழக பணிமனையில் நேற்றிரவு பராமரிப்பு பணிகள் நடைபெற்றன. இதில் பேருந்து ஒன்று திடீரென கட்டுப்பாட்டை இழந்து சுவரின் மீது மோதியது. நள்ளிரவு ஒரு மணி அளவில் நடந்த இந்த விபத்தில் 7 ஊழியர்கள் சிக்கி கொண்டனர்.
அவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதில், 2 ஊழியர்கள் வழியிலேயே உயிரிழந்து விட்டனர். மற்ற 5 பேருக்கும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதனை தொடர்ந்து இன்று காலை முதல் போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ளனர். பேருந்துகள் முறையாக பராமரிக்கப்படவில்லை என வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் கூறியதுடன், மரணமடைந்த ஊழியர்கள் குடும்பத்தினருக்கு நிவாரணம் வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளனர். பேருந்துகள் இயங்காத நிலையில் மக்கள் பாதிப்படைந்து உள்ளனர்.
Related Tags :
Next Story