அ.தி.மு.க. வேட்பாளர் முத்தமிழ்செல்வனுக்கு ஆதரவாக விஜயகாந்த் விக்கிரவாண்டியில் பிரசாரம்


அ.தி.மு.க. வேட்பாளர் முத்தமிழ்செல்வனுக்கு ஆதரவாக விஜயகாந்த் விக்கிரவாண்டியில் பிரசாரம்
x
தினத்தந்தி 19 Oct 2019 12:39 PM GMT (Updated: 19 Oct 2019 12:39 PM GMT)

அ.தி.மு.க. வேட்பாளர் முத்தமிழ்செல்வனுக்கு ஆதரவாக விக்கிரவாண்டியில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் பிரசாரம் மேற்கொண்டார்.

விழுப்புரம்,

தமிழகத்தில் மொத்தம் உள்ள 234 சட்டசபை தொகுதிகளில் நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய 2 தொகுதிகள் காலியாக உள்ளன. இந்த தொகுதிகளுக்கும், புதுச்சேரி மாநிலத்தில் காலியாக உள்ள காமராஜர் நகர் தொகுதிக்கும் வருகிற 21ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

ஆளும் கட்சியான அ.தி.மு.க. நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய இரு தொகுதிகளிலும் போட்டியிடுகிறது. அக்கட்சி சார்பில், நாங்குநேரி தொகுதியில் ரெட்டியார்பட்டி வி. நாராயணனும், விக்கிரவாண்டி தொகுதியில் எம்.ஆர். முத்தமிழ்செல்வனும் வேட்பாளர்களாக களம் இறக்கப்பட்டு உள்ளனர்.

அ.தி.மு.க.வின் கூட்டணி கட்சிகளில் ஒன்றான தே.மு.தி.க.வின் தலைவர் விஜயகாந்த், அ.தி.மு.க. வேட்பாளர் முத்தமிழ்செல்வனை ஆதரித்து விக்கிரவாண்டியில் இன்று திடீர் பிரசாரம் மேற்கொண்டார். இன்று மாலை 6 மணியுடன் பிரசாரம் நிறைவடைகிறது.  இந்நிலையில், இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் விஜயகாந்த் ஈடுபட்டார்.

அ.தி.மு.க. வேட்பாளர் முத்தமிழ்செல்வனை ஆதரித்து, விக்கிரவாண்டி நகர பகுதியில் பிரசாரம் மேற்கொண்ட விஜயகாந்த், அனைவரும் இரட்டை இலைக்கு ஓட்டளியுங்கள் என காரில் அமர்ந்தபடியே கூறினார்.

Next Story