தமிழகத்தில் உள்ள கல்லூரிகள், பல்கலைக் கழகங்களுக்கு நாளை முதல் விடுமுறை


தமிழகத்தில் உள்ள கல்லூரிகள், பல்கலைக் கழகங்களுக்கு நாளை முதல் விடுமுறை
x
தினத்தந்தி 20 Dec 2019 8:06 AM GMT (Updated: 20 Dec 2019 8:08 AM GMT)

தமிழகத்தில் உள்ள கல்லூரிகள், பல்கலைக்கழகங்களுக்கு நாளை முதல் ஜனவரி 1 ஆம் தேதி வரை விடுமுறை விடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில், ஒட்டு மொத்த மாணவர்களும் போராட்டத்தில் குதித்துள்ளனர். தமிழகத்திலும் மாணவர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த சூழலில், தமிழகத்தில் உள்ள  கல்லூரிகள், பல்கலைக்கழகங்களுக்கு நாளை முதல் வரும் ஜனவரி 1- ஆம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கிறிஸ்துமஸ், ஊரக உள்ளாட்சி தேர்தல்,  புத்தாண்டை முன்னிட்டு விடுமுறை விடப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. விடுமுறை முடிந்து ஜனவரி 2 ஆம் தேதி கல்லூரிகள் திறக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story