சுதந்திர தின விழாவையொட்டி தமிழக காவல் துறையில் 23 பேருக்கு ஜனாதிபதி விருது - மத்திய அரசு அறிவிப்பு
சுதந்திர தின விழாவையொட்டி தமிழக காவல்துறையில் 23 பேருக்கு ஜனாதிபதி விருதை மத்திய அரசு அறிவித்து உள்ளது.
சென்னை,
சிறந்த மற்றும் மெச்சத்தகுந்த வகையில் காவல்துறையில் பணியாற்றுபவர்களுக்கு ஆண்டுதோறும் சுதந்திர தின விழாவையொட்டி ஜனாதிபதி விருதை மத்திய அரசு வழங்கி வருகிறது. இந்த ஆண்டு சுதந்திர தின விழாவையொட்டி தமிழக காவல்துறையை சேர்ந்த 23 பேருக்கு ஜனாதிபதி விருதுகளை மத்திய அரசு வழங்குகிறது. இதற்கான அறிவிப்பு நேற்று வெளியானது.
ஜனாதிபதி விருது பெறுவோர்கள் விவரம் வருமாறு:-
1.மு.சத்தியபிரியா- பயிற்சி பிரிவு டி.ஐ.ஜி., சென்னை.
2.ஈ.எஸ்.உமா- கோவை மாநகர் குற்றப்பிரிவு துணை கமிஷனர்.
3.ரா.திருநாவுக்கரசு - சென்னை உளவுப்பிரிவு துணை கமிஷனர்.
4.வெ.விஸ்வேசுவரைய்யா - சென்னை நீலாங்கரை உதவி கமிஷனர்.
5.க.யுவராஜ் - சென்னை சமூகநீதி மற்றும் மனித உரிமை உதவி கமிஷனர்.
6.ஏ.மெக்ளரின் எஸ்கால்- நெல்லை லஞ்சஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு.
7.சு.ரவிச்சந்திரன் - சென்னை சி.பி.சி.ஐ.டி. துணை போலீஸ் சூப்பிரண்டு.
8.செ.சார்லஸ் சாம் ராஜதுரை - சென்னை உளவுப்பிரிவு உதவி கமிஷனர்.
9.ம.சத்தியசீலன்- மதுரை லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு.
10.சி.மனோகரன்- தஞ்சை லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு.
11.ஈ.எஸ்.ஜே.மெல்வின் ராஜா சிங்- கடலூர் லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு.
12.க.சசிகுமார்- ஈரோடு சிறப்பு காவல்படை இன்ஸ்பெக்டர்.
13.அ.இருதயம்- சென்னை கடலோர பாதுகாப்பு குழும இன்ஸ்பெக்டர்.
14.அ.இமானுவேல் ஞானசேகர்- மாநில உளவுப்பிரிவு இன்ஸ்பெக்டர், சென்னை.
15.நா.இளங்கோவன்- சென்னை பல்லாவரம் சட்டம்-ஒழுங்கு இன்ஸ்பெக்டர்.
16.பி.சுந்தரராஜன்- திண்டுக் கல் லஞ்ச ஒழிப்பு இன்ஸ்பெக்டர்.
17.தி.கந்தசாமி- சென்னை லஞ்ச ஒழிப்பு இன்ஸ்பெக்டர்.
18.அ.ஆம்புரோஸ் ஜெயராஜா- மதுரை லஞ்ச ஒழிப்பு இன்ஸ்பெக்டர்.
19.பா.பாலகிருஷ்ணன்- சென்னை பாதுகாப்பு பிரிவு சப்-இன்ஸ்பெக்டர்.
20.சி.விஸ்வநாதன்- சேலம் லஞ்ச ஒழிப்பு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்.
21.ப.பிரகலாதன்- சென்னை லஞ்ச ஒழிப்பு சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர்.
22.இரா.ஆண்டனி ஜான்சன் ஜெயபால்- தமிழ்நாடு சிறப்பு காவல்படை கமாண்டர், ஆவடி.
23.பெ.ரவிசந்திரன்- தமிழ்நாடு சிறப்பு காவல்படை கமாண்டர், போச்சம்பள்ளி.
Related Tags :
Next Story