சட்டப்பேரவைக்குள் குட்கா கொண்டு சென்ற விவகாரம் - நாளை விசாரிக்கிறது உயர்நீதிமன்றம்
சட்டப்பேரவைக்குள் குட்கா கொண்டு சென்ற விவகாரம் தொடர்பாக உயர்நீதிமன்றம் நாளை விசாரணை செய்ய உள்ளது.
சென்னை,
சட்டப்பேரவைக்குள் குட்கா கொண்டு சென்ற விவகாரம் தொடர்பாக உயர் நீதிமன்றம் நாளை விசாரணை செய்ய உள்ளது. உரிமை மீறல் குழு 2வது முறையாக அனுப்பிய நோட்டீஸை எதிர்க்கும் திமுக மனு மீது இந்த விசாரணை நடைபெற உள்ளது.
ஸ்டாலின் உள்பட 18 திமுக எம்.எல்.ஏக்கள் தொடர்ந்த மனுவை உயர்நீதிமன்ற நீதிபதி ரவிச்சந்திர பாபு நாளை விசாரிக்கிறார்.
முன்னதாக சட்டப்பேரவைக்குள் குட்கா பொருள்களை எடுத்து சென்ற விவகாரத்தில் உரிமைக்குழு மீண்டும் அனுப்பிய நோட்டீஸை எதிர்த்து மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 18 திமுக எம்எல்ஏக்கள் சார்பில் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
Related Tags :
Next Story