சாமானியர்களின் முதல்வரே.., வருங்கால முதல்வரே..,என முழக்கமிட்டு ஈ.பி.எஸ்- ஓ.பி.எஸ்-க்கு ஆதரவாளர்கள் வரவேற்பு
பரபரப்பான சூழலில் கூடிய அதிமுக செயற்குழு சாமானியர்களின் முதல்வரே என பழனிசாமிக்கும் வருங்கால முதல்வரே என முழக்கமிட்டு ஓ.பன்னீர் செல்வத்திற்கும் ஆதரவாளர்கள் வரவேற்பு அளித்தனர்.
சென்னை :
அ.தி.மு.க. செயற்குழு கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று காலை 9.45 மணியளவில் தொடங்கியது.
கட்சியின் அவைத்தலைவர் இ.மதுசூதனன் தலைமையில் கூட்ட்ம் தொடங்கியது அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, முன்னணி நிர்வாகிகள் உள்பட செயற்குழு உறுப்பினர்கள் பங்கு உள்ளனர்.
சென்னையில் இன்று நடைபெற உள்ள அதிமுக செயற்குழு கூட்டத்தில் 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஜெயலலிதாவின் அரசியல் வாரிசே என்ற பதாகைகளுடன் வரவேற்கும் துணை முதல்வரின் ஆதரவாளர்கள். துணை முதல்வரின் முகமூடி அணிந்து வந்துள்ளனர் அவரது ஆதரவாளர்கள்.
'சாமானியர்களின் முதல்வரே வருக வருக' என ஈபிஎஸ்க்கு அவரது ஆதரவாளர்கள் வரவேற்பு அளித்தனர்.
வருங்கால முதல்வர் என முழக்கமிட்டு ஓ.பி.எஸ்.க்கு வரவேற்பு அளித்தனர்.
அதிமுக செயற்குழுக் கூட்டத்தில் பங்கேற்க இருந்த 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.செயற்குழுவில் பங்கேற்க 284 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. 284 பேருக்கு நடத்தப்பட்ட சோதனையில் 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.
கூட்டத்திற்கு முன்னதாக முதல்வர் பழனிசாமியுடன் அமைச்சர்கள் சிலர் தனித்தனியாக சந்தித்து பேசினர்.
'சாமானியர்களின் முதல்வரே வருக வருக' என ஈபிஎஸ்க்கு அவரது ஆதரவாளர்கள் வரவேற்பு #Edappadipalaniswami | #AIADMKhttps://t.co/jhJUR2t1no
— Thanthi TV (@ThanthiTV) September 28, 2020
வருங்கால முதல்வர் என முழக்கமிட்டு ஓ.பி.எஸ்.க்கு வரவேற்பு #OPannerSelvam | #AIADMKhttps://t.co/J87X5Rp1CL
— Thanthi TV (@ThanthiTV) September 28, 2020
Related Tags :
Next Story