கன்னியாகுமரி இடைத்தேர்தல் காங்கிரஸ் கட்சியினர் விருப்ப மனு அளிக்கலாம்


கன்னியாகுமரி இடைத்தேர்தல் காங்கிரஸ் கட்சியினர் விருப்ப மனு அளிக்கலாம்
x
தினத்தந்தி 1 March 2021 1:58 AM GMT (Updated: 1 March 2021 1:58 AM GMT)

கன்னியாகுமரி இடைத்தேர்தல் காங்கிரஸ் கட்சியினர் விருப்ப மனு அளிக்கலாம் கே.எஸ்.அழகிரி அறிவிப்பு.

சென்னை, 

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

நடைபெறவுள்ள கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி இடைத்தேர்தலில், தமிழக காங்கிரஸ் கட்சி சார்பில் வேட்பாளராகப் போட்டியிட விருப்பம் தெரிவிக்கும் காங்கிரஸ் கட்சியினரிடம் இருந்து மார்ச் 1-ந் தேதி (இன்று) முதல் 5-ந் தேதி வரை சென்னை, சத்தியமூர்த்தி பவனில் விருப்ப மனுக்கள் பெறப்பட உள்ளது.

விருப்ப மனுக்களை அளிக்க விரும்பும் காங்கிரஸ் கட்சியினர் ரூ.500 கட்டணம் செலுத்தி, விண்ணப்பப் படிவத்தை பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவங்களை மார்ச் 5-ந் தேதிக்குள் ரூ.25 ஆயிரம் கட்சி நன்கொடையாக வரைவோலை மூலம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.

விருப்ப மனு அளிக்கும் அனைவரும் தங்களுடைய வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை மற்றும் பான் கார்டு ஆகியவற்றின் நகலை கட்டாயம் இணைக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story